மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

வெள்ளி, 18 ஜூன் 2021 (10:42 IST)
தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ள நிலையில் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் நேற்று மறுப்பு தெரிவித்தது. இதனால் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்