சென்னையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கானா பாலா! – சுயேட்சையாக போட்டி!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:41 IST)
பிரபல பாடகரான கானா பாலா நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் 6வது மண்டலம் 72வது வார்டில் போட்டியிட பிரபல கானா மற்றும் திரை பாடகர் கானா பாலா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அப்பகுதியில் 2006 மற்றும் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போதும் கானா பாலா அந்த வார்டில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்