முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது. ஓபிஎஸ் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டனர். பின்னர் சசிகலா சிறைக்கு செல்ல அந்த அணி தினகரன் தலைமையில் இயங்கியது. தற்போது தினகரனும் சிறையில் உள்ளதாலும், அவர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டதாலும் அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுகிறது.