4 பன்றிகளுக்கு பூணூல் போட்ட தி.கவினர். ஒரு பன்றி இறந்ததால் பரபரப்பு

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (00:30 IST)
கேவலமான போராட்டங்கள் நடத்துவதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் திகவினர் அவ்வப்போது தாலி அறுப்பு உள்ளிட்ட நகைப்புக்குரிய போராட்டங்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று நான்கு பன்றிகளுக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தினர்.



 
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலை அருகே 4 பன்றிகளை அழைத்து வந்த திராவிடர் கழகத்தினர் அவைகளுக்கு பூணூல் போட முயற்சி செய்தனர். அப்போது ஒரு பன்றி எதிர்பாராமல் இறந்து போனது மற்ற 3 பன்றிகளுக்கும் காயம் ஏற்பட்டது
 
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தை சேர்ந்த 9 பேர்களை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்