பள்ளி கழிவறை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி - நெல்லையில் பதற்றம்!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:57 IST)
நெல்லை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து  2 மாணவர்கள் பலி!
 
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பலி பலியாகியுள்ளனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் நெல்லை டவுன் சாப்டர் பள்ளியை சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்