2 மணி நேரம்தான் செய்முறை தேர்வு! – 10,11,12ம் வகுப்புகளுக்கு தொடக்கம்!

திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:21 IST)
தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நேரடியாக நடைபெற உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன. இந்த நிலையில் இன்று முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல கட்டங்களாக இந்த செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் செய்முறை தேர்வுகள் நடைபெறும் நிலையில் இந்த முறை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்