மனுஷ மிருகங்கள தண்டிக்கனும் - சத்தியராஜ் ஆவேசம்

செவ்வாய், 12 மார்ச் 2019 (20:05 IST)
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் 4 பேர் திருநாவுக்கரசு, நாகராஜ், சபரிராஜ், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இநிநிலையில் பல்வேறு அமைப்பினர், திரையுலக பிரமுகர்கள் எனப்பலரும் தங்ககள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 
இதற்கு நடிகர் சத்தியராஜும் தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது.
 
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம். எனது சிறிய வேண்டுகோள் மனநலம் பற்றி பாடத்திட்டம் பள்ளியிலிருந்தே மனநலம் கற்பிக்க வேண்டும். மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சட்டப்படியாக உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்