மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:25 IST)
மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற மாணவி ரயில் மீது தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இந்த வழக்கை  சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு ரயில்வே காவல்துறையினர் இருந்து சிபிசிஐடிக்கு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ரயில்வேதுறை காவல்துறையினர் சிபிசிஐடிக்கு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சிபிசிஐடி இந்த வழக்கை முழுமையாக விசாரித்து குற்றவாளி சதீஷ்க்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்