சத்யாவை 10 நாட்கள் பின்தொடர்ந்து சென்றேன்: கொலையாளி சதீஷ் வாக்குமூலம்!

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (14:35 IST)
கல்லூரி மாணவி சத்யாவை 10 நாட்கள் பின் தொடர்ந்து சென்றேன் என சத்யாவை கொலை செய்த கொலையாளி சதீஷ் வாக்குமூலம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கல்லூரி மாணவி சத்யாவை தான் ஒருதலையாக காதலித்ததாகவும் ஆனால் தன் காதலை சத்யா ஏற்காததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 
மேலும் கல்லூரி மாணவி சத்யாவை 10 நாள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக சத்யாவை காதலித்து வந்ததாகவும் ஆனால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் அவரை கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்