சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பு பங்களா திடீர் முடக்கம்!

புதன், 8 செப்டம்பர் 2021 (14:44 IST)
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களாவை வருமானத்துறை அதிகாரிகள் முடக்கி இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறித்த வழக்கின் தீர்ப்பின்படி சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையை அடுத்த பையனூர் உள்ள சொகுசு பங்களா ஒன்றை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது, இந்த சொகுசு பங்களாவில் மதிப்பு 100 கோடி என்று கூறப்படுகிறது 
 
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததாகவும் இந்த சோதனையின் அடிப்படையில் பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலாவின் சொகுசு பங்களா முடக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்