விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:33 IST)
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை புதுச்சேரி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருக்கும் நிலையில் புதுச்சேரி அரசு விநாயகர் சதுர்த்திற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருவன:
 
1. விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்படும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், குறைந்த உயரத்திலும் இயற்கையான பொருட்களைக் கொண்டும் தயாரித்திருக்க வேண்டும்;
 
2. ரசாயனம் பூசிய வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது, ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது;
 
3. சிலைகளை உருவாக்க நச்சு மட்டும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்"
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்