இலங்கை நாட்டிற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய், 3 மே 2022 (19:00 IST)
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

மக்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். எனவே அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடன் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி நிலமையைச் சீர்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின்,  இலங்கையில் உள்ள  மக்களுக்குத் தேவையான மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் எனவும், தேவையான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்களுக்கு முதற்கட்டமாக தமிழகத்தில் இருது 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் ரூ.1 கோடி முதல்வரின் பொது   நிவாரண   நிதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்