தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்: வீரேந்திர சேவாக்

திங்கள், 23 ஜனவரி 2017 (17:21 IST)
தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் ஒரு எடுத்துக்காட்டுக்கு வழிவகுத்துள்ளனர் என்றும் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
மெரீனா கடற்கரையில் இன்று காவல்துறையினர் அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்து கிளம்பிய மாணவர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் சென்னையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை அமைதியாக இருக்கும் வேண்டும் என்றும், அனைவரும் மெரீனாவில் இருந்து கிளம்ப வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் அமைதி நிலக வேண்டுக்கொள் விடுகிறேன். தமிழக மக்கள் ஒரு எடுத்துக்காட்டுக்கு வழிவகுத்துள்ளனர், என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்