முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியிட நீதிமன்றத்தை நாடினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகளை படித்து பார்த்து தெரிந்து கொள்ள உத்தரவிட்டது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளே வதந்திகள் பரவ காரணமாகி போனதால், இனிமேல் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிட வேண்டாம் என சசிகலா தரப்பு உத்தரவிட்டதாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் அடங்கிய மருத்துவமனையின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என உத்தரவிட சசிகலாவுக்கு யார் அதிகாரமளித்தது, அரசு நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் எப்படி மாநில முதல்வரின் உடல் நிலை தொடர்பான விஷயங்களில் உத்தரவிட முடியும், அவருக்கு யார் அந்த உரிமைய வழங்கியது என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.