நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

Siva

வெள்ளி, 24 மே 2024 (08:37 IST)
நடிகை கெளதமியை ரியல் எஸ்டேட் நபர் ஒருவர் கோடிக்கணக்கில் ஏமாற்றிய நிலையில் தற்போது அவருடைய சகோதரரையும் அதே நபர் ஏமாற்றி உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கௌதமி ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய பவர் அதிகாரம் கொடுத்த நபர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னுடைய நிலத்தை 60 லட்சத்துக்கு மேல் மோசடியாக விற்பனை செய்து அந்த தொகையை தனக்கு தரவில்லை என்று ஏற்கனவே புகார் அளித்த நிலையில் அழகப்பன் பலராமன் ஆகிய இரண்டு பேர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கெளதமியை மட்டுமின்றி அவருடைய சகோதரர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு சொந்தமான நிலத்தையும் அதே நபர்கள் பவர் தனி அதிகாரம் பெற்று விற்பனை செய்துள்ளதாகவும் ஒரு கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலத்தின் பணத்தை தங்களுக்கு தரவில்லை என்றும் ஸ்ரீகாந்த் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் ஆகியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிகிறது. ஒரே நபர்கள் கௌதமி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்