10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: பள்ளிக்கல்வித்துறை

சனி, 4 ஜூன் 2022 (23:05 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பல மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது
 
இந்நிலையில் இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் 
 
எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத  மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்