பதவி வேணா ஒரு மண்ணும் வேணா... விரக்தியில் ரவீந்திரநாத்: அப்செட்டில் அதிமுக!!

வெள்ளி, 7 ஜூன் 2019 (16:04 IST)
பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், அதிமுகவிற்கு ஆறுதல் வெற்றியாக இருந்தது தேனி தொகுதி மட்டுமே. ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார்தான் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 
 
தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித்தர கடும் முயற்சிக்களை மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பின் போது பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடப்பட்டது என்று கூறப்பட்டது. 
ஆனால், அவருக்கு எதிர்பார்த்தது போல பதவி கிடைக்கவில்லை. இதனால், வெற்றி பெற்றும் பயனில்லாததால் விரக்தியில் உள்ளாராம் ரவீந்திரநாத். அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து அதிமுக வட்டாரத்தில், ரவீந்திரநாத் பாஜகவில் இணைவதாய் வெளியாகும் தகவல் பொய்யானது. யார்தான் இந்த மாதிரி தகவலை எல்லாம் கிளப்பிவிட்ராங்களோ என அப்டெட்டில் உள்ளார்களாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்