ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய ராஜீவ் கொலையாளி

புதன், 10 ஜனவரி 2018 (22:13 IST)
ஹார்வர்ட் பல்கலையில் செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு இருக்கை பெற உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி திரட்டி வருகின்றனர். கோலிவுட் திரை நட்சத்திரங்களும், தமிழக அரசும் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் இருக்கைக்கு நிதியளித்து வருகின்றனர். தமிழ் இருக்கை பெற தேவையான தொகை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன் என்பவர் தண்டனை காலத்தில் சிறையில் சம்பாதித்த ரூ.20,000 பணத்தை ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக வழங்கியுள்ளார்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து ரவிச்சந்திரனின் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நெட்டிசன்கள் ரவிச்சந்திரனை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். கோடானு கோடி தமிழர்களின் கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டதாக அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்