குரூப் 4 தேர்வு சரியாக எழுதவில்லை.. மன அழுத்தத்தில் இளைஞர் தற்கொலை..!

Mahendran

வெள்ளி, 14 ஜூன் 2024 (14:43 IST)
கடந்த வாரம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சரியாக எழுதவில்லை என்ற வருத்தத்தில் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்ற 25 வயது இளைஞர் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுதிய நிலையில் அவர் அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என மன வருத்தத்தில் புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் திடீரென விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்ததை குடித்த நிலையில் அவரது வாயில் நுரை தள்ளியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சையின் பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கிருபாகரனின் உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுத காட்சி கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்