ரஜினி வருகை - தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதன், 30 மே 2018 (10:23 IST)
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற  நேரில் சென்றுள்ளதால் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தனது அரசியல் வருகை குறித்த அறிவுப்பு பின்னர் முதன்முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்குகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார். 
ரஜினிகாந்தின் வருகையையொட்டி தூத்துக்குடியில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்