சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீர் மழை: சாலைகளில் மழைநீர்!

திங்கள், 7 நவம்பர் 2022 (20:30 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை , மயிலாப்பூர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த மழை காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்