7 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:37 IST)
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
 
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 7 மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் 
நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்