தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை : மக்கள் மகிழ்ச்சி

ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:27 IST)
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்து வருகின்றது. அதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால்,  தமிழகம்  முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

பலதொழிலாளர்,தொழிலாளர்களின் வாழ்வாதம் முடங்கியுள்ளது. இது கோடைகாலம் என்பதல் வெயிலும் ஒருபக்கம் வாட்டி எடுககிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டத்தில், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மதுரையில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில்,  கம்பம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்மழை பெய்துகொண்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்