தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

ஞாயிறு, 2 ஜூலை 2023 (12:04 IST)
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
மேற்கு சுழற்சி காற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்துவரும் நிலையில் இன்று பிற்பகல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்