தீபாவளியை முன்னிட்டு 2 கிலோ சர்க்கரை & 10 கிலோ அரிசி இலவசம்!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:17 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர 4 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நியாய விலைக் கடைகளில் இவை வழங்கப்படும் எனத் தெரிகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்