கட்டுப்பாடுகளை பின்பற்ற முதல்வர் அறிவுறுத்தனும்... ஓ.பி.எஸ் கோரிக்கை

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (08:41 IST)
கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் மக்களை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை. 

 
தீபாவளி திருநாள் அடுத்த வாரம் வியாழன் அன்று பொதுமக்கள் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் ஏற்கனவே இருந்து வரும் பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் ஆகியவற்றில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மக்கள் தீபாவளி பண்டிகைக்கு துணி மற்றும் நகைகள், பட்டாசுகள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் கடைவீதிகளில் பொதுமக்கள் கூடுகின்றனர். 
 
இந்நிலையில் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் மக்களை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்