பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்த புதுச்சேரி முதல்வர்: தீவிர ஆலோசனை

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (14:55 IST)
பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்த புதுச்சேரி முதல்வர்: தீவிர ஆலோசனை
புதுவை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்வர் ரங்கசாமி முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன 
 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆட்சிக்கு பாஜக ஆதரவு தந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுச்சேரியில் ரங்கசாமியின் ஆட்சியை தவிர்த்துவிட்டு பாஜக ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி முன்னாள் பிரதமர் மோடியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுவை அரசியல் மற்றும் பொது நலன் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்