ஒரு நபருக்கு அதிகபட்ச தொகையாக ரூ.4000 வரை வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வங்கிக்கு சென்று பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர். ஏராளமான பொதுமக்களிடம் புழங்குவதற்கு ரூபாய் நோட்டுகள் இல்லாததால், அனைவரும் வேலைக்கு செல்லாமல், எல்ல பணிகளையும் விட்டுவிட்டு முதல் வேலையாக ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிகையை குறிப்பிட வேண்டும். மாற்று பணத்தில் பழைய 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளும் வழங்கபடுகிறது. வங்கிகளில் டெபாசிட் மற்றும் மாற்று பணத்துக்கு என்று தனி தனியாக கவுண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.