ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (20:26 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு டிசம்பர் 4ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் சற்றுமுன் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

சென்னை பூவிருந்தவல்லியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சற்றுமுன் நடந்தது. இந்த கூட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத்தத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்