ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டத்தில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், ஒலி மாசு ஏற்படும் வகையில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுவதாக கூறி, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை தீர்ப்பாய விதிமுறைகளை பின்பற்றியே விழா நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது. இதனை அடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.