காரில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா!

திங்கள், 30 அக்டோபர் 2023 (09:29 IST)
உசிலம்பட்டி அருகே ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் - கடத்தல் தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பன்னியான் விலக்கு பகுதியில் செக்காணூரணி காவல் நிலைய போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாகன சோதனையின் போது சந்தேகப்படும்படி வந்த இனோவா காரை இடைமறித்து சோதனை நடத்தியதில் காரில் 44 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.இந்த கடத்தல் தொடர்பாக வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் உள்பட பழனியைச் சேர்ந்த காசிமாயன், குழித்தலையைச் சேர்ந்த சுரேஷ், திண்டுக்கலைச் சேர்ந்த சுகுமாறன் என்ற 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 980 ரூபாய் ரொக்கம், 11 செல்போன்கள், கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்