பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக பொய்ப்புகாரா? அதிர்ச்சி தகவல்..!

திங்கள், 12 ஜூன் 2023 (12:03 IST)
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் விசாரணையின் முடிவில் அவரது வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது
 
மேலும் பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மார்ச் 30ஆம் தேதி தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
 
மேலும் நகைகள் திருட்டு என  பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்