ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கு முடக்கம்: காவல்துறை அதிரடி

சனி, 25 டிசம்பர் 2021 (11:32 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து அவர் திடீரென தலைமறைவானார் என்பதும், அவரை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் நகர்வுகளை தடுக்கும் வகையில் தான் அவரது வங்கி கணக்கில் முடக்கபப்ட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக அவுட்லுக் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தற்போது வங்கி கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்