சிறுவனை பாலியல் வன் கொடுமை செய்த பெண் மீது போக்ஸோ வழக்கு

திங்கள், 26 செப்டம்பர் 2022 (18:21 IST)
நாகபட்டினத்தில் சிறுவனை பாலில் வன்கொடுமை செய்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகபட்டினம் மாவட்டத்தில்  ஒரு 17 வயது சிறுவன், 19 வயதுடைய பெண்ணுடன் நீண்ட நாட்கள் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  இருவருக்கும் இடையேயான பழக்கம் அதிக நெருக்கமாகவே, வீட்டில் யாருமில்லாத நேரம், அந்தப் பெண்  சிறுவனைக் கட்டாயப்படுத்தி வ்ன்கொடுமை இருந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து , சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, அவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து, சிறுவனை பாலியல் வன் கொடுமை செய்த  17 வயது பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்