மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்.. அண்ணாமலை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பு..!

Siva

செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:55 IST)
பிரதமர் மோடி கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட தக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 18ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார்

அதன் பின் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது  

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்