பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:11 IST)
பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
11ஆம் வகுப்பு துணை தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் 
 
பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாதவர்கள் துணை தேர்வு எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிளஸ்-1 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்