மாஸ்க் இல்லைனா பெட்ரோலும் இல்ல! – பெட்ரோலிய வணிகர் சங்கம் கறார்!

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:19 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் நிலையங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு நேர, பகுதி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்து முயற்சியில் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கமும் புதிய கட்டுப்பாடை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் பெட்ரோல், டீசல் நிரப்ப வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணிந்திராத பட்சத்தில் அவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது. இந்த கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்