கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சச்சின்!

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:54 IST)
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வுக்கான ஓய்வு பெற்ற வீரர்களின் தொடரில் கலந்துகொண்டார். அந்த தொடர் முடிந்த சில தினங்களில் இப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் சோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

ஆனால் அவரின் குடும்பத்தார் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் முடிவு வந்துள்ளது. இதனல் சச்சின் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைக்கு பின் இப்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்