பாஜக தலைவர் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

புதன், 28 ஏப்ரல் 2021 (19:46 IST)
பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலை, ரமணா நகரில் வசித்துவருபவர் பாஜக துணைத்தலைவர் அருணை ஆனந்தன் ( தெற்கு மாவட்டம்). இவர் வீட்டின் முன் நேற்ற் நள்ளிரவு திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து  , அருணை ஆனந்தன்,  போலீஸில் புகார் தெரிவித்தார். குறிப்பாக அதில், அப்பகுதியில் டோக்கம் விநியோகம் செய்ததை தான் தேர்தல் பிரசாரத்தின்போது தடுத்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில்  பாஜக வேட்பாளர் தணிகை வேல் சேர்க்கப்பட்டுள்ளார்.  மேலும் இதுகுறித்த சிசிடிவி காஅட்சிகளும் வெளியாகிப் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்