தேர்தல் முடிந்த பின்னரும் மாறாத பெட்ரோல் விலை: என்ன காரணம்?

வெள்ளி, 11 மார்ச் 2022 (07:15 IST)
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த மறுநாளே பெட்ரோல் விலை ரூபாய் 10 முதல் 20 வரை உயரும் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்
 
ஆனால் தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பெரும் ஆச்சரிமாக உள்ளது. 
மேலும் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் இன்னும் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
ஓட்டு போட்ட மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற காரணமா அல்லது ஏற்கனவே மிக அதிகமாக உயர்த்தி விட்டதால் அந்த உயர்வை சரி கட்டுவதற்காக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருக்கிறதா என்பது குறித்து பொதுமக்கள் பேசி வருகின்றனர் 
 
எது எப்படியோ 127 ஆவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது நிம்மதிக்குரிய ஒரு விஷயமே. இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43  எனவும் விற்பனையாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்