போதையில் குவாட்டர் பாட்டிலை பின்பக்கம் சொருகிய நபர்

வெள்ளி, 29 மே 2020 (21:52 IST)
நாகை மாவட்டம் அடுத்த நாகூர் பகுதியைச் சேர்ந்தவர்  பக்கிரிசாமி (29 ).  மதுப்பிரியர். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 2 நாட்களாக மதுகுடிக்காலம் இருந்ததாக தெரிகிறது.

அதன்பின்னர், கடந்த 26 ஆம் தேதி மதுக்கடைகள் திறந்தபோது அதிகளாவில் குடித்துள்ளார்.இதனால் போதை தலைக்கு ஏறி மதுகுடித்த தனது குவாட்ட பாட்டிலை எடுத்து தனது ஆசன வாய்க்குள் சொறுகியுள்ளதாக தெரிகிறது.

இதில், அந்த பாட்டில் முழுவதும் வயிற்றுக்குள் சென்றுவிட அவர் வலியால் துடித்துள்ளார். அவரை மீட்ட அருகில் உள்ளோர் அவரை நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அப்போது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்த மருத்துவர்கள்  மதுபாட்டில் உள்ளே இருப்பதைக் கண்டறிந்தனரர்.

பின்னர் பக்கிரிசாமிக்கு இனிமா கொடுத்து அவர் வயிற்றில் உள்ள பாட்டிலை வெளியே எடுத்து அவரைக் காப்பாற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்