தமிழகத்தில் 100% இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி

சனி, 23 அக்டோபர் 2021 (19:56 IST)
தமிழகத்தில்  வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்றின்  முதல் அலை முடிந்து தற்போது 2 வது வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவைத் தடுக்க 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

எனவே தியேட்டர்களுக்கு எப்போது 100% இருக்கைகளுடன் பார்வையாளருக்கு அனுமதி அளிக்க வேண்டுமென தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே   தீபாவளி பண்டிகையும் வருவதால் தமிழகத்தில்  வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்