இதனையடுத்து கண்மாய்யை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஊர் மக்கள் பொதுக்கூட்டம் போட்டு ஓவ்வொரு வீடாக நிதி திரட்டி கண்மாய்யை தூர்வாரா முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென தனது ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கண்மாய் தூர்வாரு பணியை பார்வையிட சென்றுள்ளார்.
அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ தங்க தமிழ் செல்வனை முற்றுகையிட்டு, கண்வாய் தூர்வாரா நிதி ஒதுக்காத எம்எல்ஏவை கண்மாயில் கால் வைக்க விடமாட்டோம் என கூறி ஊரில் இருந்து விரட்டி அடித்ததாக தகவல்கள் வருகிறது.