செல்ல நாயை வெளியில் விட்ட பெற்றோர் : மனமுடைந்த பெண் தற்கொலை !

வெள்ளி, 1 நவம்பர் 2019 (14:15 IST)
வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாயை, பெற்றோர் வெளியே அனுப்பியதால் மனமுடைந்த பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சாமி செட்டிபாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகள் கவிதா. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள ஒரு பத்திரம் எழுதுமிடத்தில் வேலை பார்த்து வந்தார்.
 
அவர்  இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு நாய்க்குட்டியை வாங்கி, தன் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். அதன் பெயர் சீசர் ஆகும்.
 
இந்நிலையில், சமீபத்தில் தீபாவளி அன்று, கவிதா வீட்டருகே பலரும் பட்டாசு வெடித்து வந்ததால், சீசர்அதன் சப்தத்தில் குரைத்துக்கொண்டிருந்தது அக்கம் பக்கத்தவருக்கு பெரும் இடையூறு செய்துள்ளது. அத்துடன் கவிதாவைப் பார்க்கவே சீசர் கதவை அடிக்கடி தள்ளுவதால், பழுதானதாகத் தெரிகிறது.
 
இதனால் ,கவிதாவின் பெற்றோர் சீசரை வெளியில் விட  முடிவெடுத்தனர். அதனால் மனமுடைந்த கவிதா, இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
 
இந்தச் சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்