காணாமல் போன 7 வயது சிறுமியை 3 மணி நேரத்தில் மீட்ட பண்ருட்டி போலீசார்!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:43 IST)
பண்ருட்டி அருகே காணாமல் போன சிறுமியை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்டு உள்ளதை அடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
பண்ருட்டி அருகே 7 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக அவரது பாட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுமி நடந்து போகும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன
 
 இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர் கிட்டத்தட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்த போது தாயின் ஞாபகம் வந்ததால் நடந்தே சென்று விட்டதாக அவர் கூறினார்
 
இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை அவரது பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சிறுமி காணாமல் போன மூன்று மணி நேரத்தில் பண்ருட்டி போலீசார் மிகத் திறமையாக சிசிடிவி காட்சியின் மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததையடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்