ஆகஸ்ட் மாதத்தில் பாமாயில், பருப்பு வாங்காதவர்களுக்கு ஒரு வாய்ப்பு: முக்கிய அறிவிப்பு..!

Siva

சனி, 31 ஆகஸ்ட் 2024 (13:20 IST)
ஆகஸ்ட் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வாங்காதவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருளை பெறாதவர்கள் அதனை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது செப்டம்பர் 5 வரை பாமாயில், துவரம் பருப்பு பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பாமாயில் துவரம் பருப்பு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்