முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சசிகலா முதல்வராக பதவியேற்க முயன்றார். இதனால் கட்சி உயர் மட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்கள் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த சூழ்நிலையில் சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் ஓபிஎஸ் தலைமையில் 11 பேர் விலகி தனி அணியாக செயல்படத் துவங்கினர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தவறு என்றும், எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர்.