தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்காது: ஓபிஎஸ் திட்டவட்டம்

புதன், 15 மார்ச் 2017 (11:25 IST)
ஆர்.கே. நகருக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.


 

இந்த நிலையில் இரட்டை இலை தங்களுக்குதான் சொந்தம் என்று கூறும் ஓபிஎஸ் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த தில்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிரம் பேசிய ஓபிஎஸ், தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்