தமிழ்நாட்டில் குறைகிறது ஒமிக்ரான்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

வியாழன், 23 டிசம்பர் 2021 (17:33 IST)
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதை பார்த்தோம். இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 34 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்பார்த்தபடி மிகப்பெரிய பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்