பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல தலைவர் கைது: என்.ஐ.ஏ அதிரடி..!

செவ்வாய், 9 மே 2023 (12:27 IST)
இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவரை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தவர் சாதிக் அலி. இந்த அமைப்பு சமீபத்தில் தடை செய்யப்பட்டது. மேலும் இவர் தேனி மாவட்டம் கம்பம் நகரின் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். 
இவரது வீட்டில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அவரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்